Wednesday, December 26, 2007

கடிதக் காவல்கள்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ‘சுதந்திரன்’ வாரப்பத்திரிகையின் ‘வளர்மதி’ சிறுவர் பகுதியில் வெளியிடுவதற்காக ‘உதவி புரிவோம்’ என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்த கட்டுரையைப் படித்த தந்தை அது நல்ல கட்டுரை எனவும் திரும்ப அழகான கையெழுத்தில் எழுதியனுப்பும் படியும் சொன்னார்.

மீண்டும் எழுதி கட்டுரையை கடித உறையினுள் வைத்து ஒட்டிய பின் உறையை வாங்கியவர் மேலும் கீழும் பார்த்தார். அவரே அந்த பார்வையை மொழி பெயர்த்தார்.

“கடிதத்தை உறைக்கு அடங்கத் தக்க வகையில் பக்குவமாக மடித்து உறையில் வைத்து ஒட்டும் போத கடித்தைப் பெறுபவர் கிழிக்கும் போது கூட தவறியேனும் கடிதம் கிழியாத வகையில் உறையின் ஓரங்களுக்கு மாத்திரம் பசை தடவ வேண்டும்” கடித உறைக்கு அளவுக்கதிகமாகப் பயன்படுத்திய பசை கட்டுரையையும் சேதமாக்கி விட்டது. இன்றைக்கு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களில் பெரும்பாலானவற்றை உறையிலிருந்து எடுப்பதற்குள் அவை துண்டு துண்டாகி விடுகின்றன. கடிதங்கள் மட்டுமல்ல, காசோலைகளும் கூட.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: