Tuesday, December 25, 2007

அர்த்த ராத்திரிக் குடைக்காரன்

முன்னாலுள்ள புடைவைக் கடையில் கடமையாற்றும் ‘சேது’ மாமா சைக்கிள் விபத்தில் காயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாலையில் அவரைப் பார்த்து விட்டு ஆறு மணிக்கு பின் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிய போது பல நாட்களுக்குப் பின் சந்தித்த பள்ளித் தோழர் சிலரின் வற்புறுத்தல் - பஸ் நிலையத்துக்கு முன்னாலுள்ள குளிரகத்தில் ஐஸ்கிறீம் சுவைக்க வருமாறு வற்புறுத்தினார்கள். எங்களுடன் இணைய விரும்பாத அப்பா மெதுவாக பின்னே வர எங்கள் வாயெல்லாம் கேலிப் பேச்சுகள். அப்பாவின் காதில் விழுந்து விடுமோ என்ற அச்சத்தேர்டு மெதுவாகத் திரும்பிய எங்கள் கள்ளப் பார்வையில் - விரித்த குiயின் கீழ் ஆறுதலாக நடந்து வருவது தெரிந்தது. நண்பர்களுள் ஒருவன் சிரித்தான்.

‘மழை தூறக்கூட இல்லை. ஏன் குடை பிடிக்கிறார்?’

மற்ற நண்பனின் சந்தேகம் ‘வெய்யிலும் இல்லை’

மூன்றாமவனின் நக்கல் ‘அற்பனுக்குப் பவுசு வந்தால் அர்த்தராத்திரியில்...’ அப்பா வெய்யிலோ மழையோ இல்லாத போதும் குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு வந்தது எனக்கும் வெட்கமாகத்தான் இருந்தது. ‘ச் ச்’ என்ற சத்தத்துடன் மரங்களிலிருந்து பறவைகள் கழித்த எச்சங்கள் எங்கள் ஆடைகளை அசிங்கம் செய்தன. அதன் பின் கேலிப் பேச்சுகள் இல்லை. அழுக்கான சேட்டுடன் ஐஸ்கிறீம் கடைக்குச் சென்றால் எங்களைக் கேலி செய்வார்களே! ஐஸ்கிறீமும் இல்லை. மழை வெய்யிலுக்கு மட்டுமல்ல – மரங்களின் கீழ் நிற்கும் போதும் மரங்களின் கீழே நடக்கும் போதும் குடைகளைப் பயன் படுத்தலாம்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: