Sunday, December 30, 2007

விவசாயத் தகவல்கள்

எரு, இலைகுழை போன்ற இயற்கைப் பசளைகளோடு தோட்டப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்ட எங்கள் கிராமவாசிகளுக்கு செயற்கை உரம் விற்கும் கடையின் அறிமுகம் 50 களின் பிற்பகுதியில் கிடைத்தது.

அந்த அறிமுகத்தினால் இயற்கைப் பசளைகள் பயன்படுத்தப்படாமல் வீணானது ஒரு புறமிருக்க ஏழ்மை நிலையில் வாழ்ந்த கிராமத்துத் தோட்டக்காரர் செயற்கை உரக் கொள்வனவிற்கு பெருமளவு பணம் செலவிட்டு, உற்பத்திச் செலவை அதிகரித்தனர். அப்போது எங்கள் கிராமத்து தோட்டக்காரர் இரண்டொருவருடன் அடிக்கடி அப்பா பரிமாறிய கருத்துக்கள் 90 களின் நடுப்பகுதியில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய போது விவசாயிகள், தோட்டக்காரர்கள் மத்தியில் என்னை வளந்தருநராக (RESOURCE PERSON) ஆக அறிமுகம் செய்தது.

உதாரணமாக வீட்டுக்கூரைகளுக்கு வேய்ந்த ஓலைகள் ஓரிரு வருடங்களின் பின் அகற்றப்பட்டு, தோட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. அந்த ஓலைகள் உரமாக நிலத்தில் தாழ்க்கப்படும் போது, அதே ஓலைகள் பசளையாக மட்டும் பயன்படாமல், அடி நிலத்திலிருந்து களைகள் முளைத்து மேலே வராமல் தடுக்கும் தடுப்பெல்லையாகவும் பயிர்களுக்காக ஊற்றப்படும் நீர் தரையின் கீழ்ப் பக்கத்தை நோக்கிச் செல்வதை தடுக்கும் தன்மை கொண்டதாகவும் (WATER HOLDING) ஓலைகள் இருக்கின்றன என அப்பா சொன்ன கருத்து என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: