Monday, December 31, 2007

படிப்புகள் பல வகை

எழுது விளைஞன் பதவியிலிருந்து நிர்வாகச் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டதும், கடமைகளைச் சரியாகச் செய்வதற்காக பல விடயங்களை படிக்க வேண்டியிருந்தது. விடுதலையில் செல்லும் போது அரசாங்க நிதிப் பிரமாணங்கள், தாபன விதிக்கோவை என சிலவற்றை காவிச் சென்று படித்தேன்,பாடமாக்கினேன்.

அப்போது அப்பா வெகு சாதாரணமாகச் சொன்னார், ‘’ கட்டி , இவையும் பார்க்கத்தான் வேணும், படிக்கத்தான் வேணும். இன்னுமொரு முக்கிய விடயம். எப்போதும் உங்களுக்கு சில மேலதிகாரிகள் இருப்பாங்கள். சில உங்கடை மட்டத்திலே வேலை செய்யிற உத்தியோகத்தராக இருப்பார்கள். சிலர் டிரைவர். பியோன் என்று உங்களுக்கு கீழை வேலை செய்யிறவங்களா இருப்பார்கள். அவர்களை எடைபோட்டு யார் எப்படியிருப்பாங்க. அவங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது. எப்ப ஒத்துப் போகலாம், எப்ப வெட்டி விடலாம், எப்ப நழுவலாம் என்பதை படிச்சிட்டால் சுகமாக வேலை செய்யலாம்’’ என்றார்.

‘ஆட்களைப் படிக்க வேண்டும’ என்று அறிவுரை வழங்கிய அப்பா, மற்றவர்கள் உன்னைப் படிக்கிறளவுக்கு நீ நடந்து விடாதே’’ என்றும் சொல்லி வைத்தார்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: