Wednesday, December 26, 2007

செய்விக்கும் சொல்லும் உத்தி 2

சில விடயங்களை மனதைப் புண் படுத்தாமல் சுட்டிக்காட்டுவதில் அப்பா கெட்டிக்காரர். ஒரு நாள் மாலை வீட்டுக்குத் திரும்பிய போது வீட்டில் அப்பா மாத்திரம் இருந்தார்.

“என்ன கட்டி சாப்பாத்துக் காலிலை ஏதோ மிதிச்சிட்டீர் போலையிருக்கு. ஒரே மணமாயிருக்கு” என்றார்.

காலைத் தூக்கிப் பார்த்துவிட்டு ஒன்றுமில்லையென்றேன். அவர் விடவில்லை. “அப்ப சப்பாத்துக்குள்ளயிருந்து மணக்குதா?

பல நாட்களாகக் காலுறைகளைத் தோய்க்காத காரணத்தால் வியர்வையும் அழுக்கும் சேர்ந்துவரும் துர்நாற்றம் என எப்படி அப்பாவுக்குச் சொல்வது?

மெதுவாக காலுறைகளையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு கிணற்றடிக்குச் சென்ற என்னை பின் தொடர்ந்த அப்பாவின் கைகளில் அழுக்கான எனது பெனியன் கைலேஞ்சி.

“சேட்டையும் காற்சட்டையையும் மட்டும் தோய்த்து iron செய்தால் போதாது. எல்லா உடுப்புகளையும் சுத்தமாக வைச்சிருக்க வேணும். இல்லையெண்டால் ஊத்தை உடுப்புகளாலை உடம்பு கடிக்கும். வருத்தமும் வரும்” என்று அப்பா சொன்னது மாலையில் வீட்டுக்குச் சென்று ஆடைகளை களையும் நினைவுக்கு வரும்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: