Friday, December 28, 2007

புத்தம் புது பாத்திரம்

புதிதாக வியாபாரம் ஆரம்பிக்கும் கடையொன்றில் அப்பாவையும் அழைத்திருந்தார்கள். பால் காய்ச்சுவதற்கு முன்பாக அப்பாவின் கேள்விக்கு “சுத்தமான பால்” என்று யாரோ பதில் சொன்னார்கள். “பாத்திரம் சுத்தமாகக் கழுவியதா?” எனக் கேட்ட போது – “இது ஹோட்டலில் பாவிச்ச கரிப்பிடிச்ச பாத்திரமில்லை. புதிசா வாங்கினது” என்று யாரோ பதில் சொன்னார்கள்.

அடுப்பில் சூடாகிக் கொண்டிருந்த வெள்ளை நிறப்பால் சிவப்பு நிறமாக மாறிக் கொண்டிருந்த போது ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்தனர்.

எல்லோர் முகத்திலும் கேள்விக்குறி

அப்பா அமைதியாகச் சொன்னார்கள் “பயப்படாதீங்க. பாத்திரம் புதிசு. மெழுகு பூசியிருக்காங்க (sealing wax) நீங்க சுத்தமாகக் கழுவயில்ல”


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: