Wednesday, September 26, 2007

பால் மா (அப்பா தொடர்-11)

ஒரு தடவை அம்மாவுக்கு வருத்தம்.‘’நெஸ்பிறே’’ பால்மாவைக் கரைத்தேன். பால்மா கட்டி கட்டியாக மிதந்து கொண்டிருந்து.
அதைப் பக்குவமாகக் கரைக்க தந்தைதான் சொல்லிக் கொடுத்தார். கிளாஸில் முதலில் சீனியைப் போட்டு இரண்டையும் நன்கு கலக்கிய பின் சுடு தண்ணீர் ஊற்றிக் கலக்கினால் பால் கட்டிபடாது.

சுவையாக இருக்க வேண்டுமானால் இன்னொரு கிளாஸை எடுத்து சற்று உயரத்திலிருந்து மறு கிளாஸ்க்கு ஊற்ற வேண்டும்.
இரண்டு தரம் ஆற்றினால் சூடு குறைந்து சுவை பெருகுமாம். காற்றுத் தேநீருடன் சேருந்து விடுமாம். அதுதான் கடையில் பருகும் தேநீர் சிலவேளையில் சுவையாக இருக்கிறதோ?

அப்பா வருவார்..........

No comments: