Tuesday, September 11, 2007

ஒரு வடையும் ஐந்து மிளகாய் துண்டுகளும் (அப்பா- 03)

(அப்பா நூலின் தொடர்)
1961ம் ஆண்டு யாழ்ப்பாணச் சத்தியாக்கிரகத்தை அடுத்து இராணுவத்தினர் குவிக்கப்பட்ட நேரத்தில் - ஒரு விருந்துக்காக இரண்டாயிரம் உழுந்து வடைகள் தயாரிக்கும் பொறுப்பு தந்தையாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கூடவே ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

நிபந்தனை இதுதான் - ஒவ்வொரு வடைக்குள்ளும் ஐந்து துண்டு மிளகாய் இருக்க வேண்டும்.

சாதாரணமான கடையில் மிளகாய்த் துண்டுகளை எண்ணி வடையில் வைத்துச் சுடுவதும், இராணுத்தினர் தொடர்பும் பிரச்சினை என்பதால் இந்த ஓடரை எடுத்துக் கொள்ள முதலாளி விரும்பவில்லை. ஆனால் தந்தையார் துணிந்து விட்டார்.

இரண்டாயிரம் வடையையும் வாங்கி செல்ல வந்த இராணுவ அதிகாரி ‘’ஒவ்வொரு வடையிலும் சரியாக ஐந்து மிளகாய்த் துண்டுகள்; இருக்குமா? எனக் கேட்டார்.


‘’ஒ.....அதெல்லாம் சரியாக இருக்கும்’’ என்று தந்தையார் பதிலளித்துதான் தாமதம். இராணுவ அதிகாரி வடையை மெதுவாக கிள்ளி மிளகாய் துண்டுகளை எண்ணிப் பார்த்து விட்டு கோபமாக “நாலு துண்டுகள் இருக்கு’’ என்றார்.

தந்தையார் சிறிதும் பதட்டப்படாமல், இரண்டொரு வடையில் நாலு துண்டுகள் வைத்தாக நினைவு. மற்றதெல்லாத்துக்கும் சரியாக ஐந்து துண்டு மிளகாய்;;’’ என்று சொல்லிக் கொண்டே ஒரு வடையை எடுத்து, மெதுவாக நுள்ளி மூன்று மிளகாய் துண்டுகளை அதிகாரியின் கையில் கொடுத்து, மிகுதி வடையைத் தமது வாயில் போட்டு ‘’அம்மா உறைக்குதே. நாலு ஆ....ஐந்து.....ஸ்.....’’என்று கணக்குக் காட்டினார். பணம் கொடுத்து முதலாளின் வயிற்றில் பால் வார்த்தார்.

‘’தொழிலைச் சரியாகச் செய்கிறோமென்றால் ஆமிக்கு மட்டுமில்லை – யாருக்குமே பயப்பிட வேண்டாம்’’ என்பது தந்தை கூறியது. போராட்டப் பிரதேசங்களில் பொறுப்பான வேலைகளைச் செய்யும் போதும் இராணுவத்தினருடன் உரையாடும் போதும் நினைவுக்கு வரும் அப்பேச்சு என்னைப் பொறுத்தளவில் தொழிலைச் சரியாகவே செய்கின்றேன்.
அப்பா வருவார்....
முன்னைய இடுகைகள் "அப்பா" என்ற வகைப்படுத்தலிலுள்...

No comments: