Wednesday, September 12, 2007

குறைவான தொழில் (அப்பா – 04)

மட்டக்களப்பு கூட்டுறவு உதவி ஆணையாளராகக் கடமையாற்றிய போது, திறந்த வெளியரங்கில் காலை ஆறுமணிக்குக் கொடியேற்ற நிகழ்வுடன் சர்வதேச கூட்டுறவாளர் விழாவை ஆரம்பிப்பதாக ஒழுங்குகள் செய்யப்பட்டன.

திறந்த வெளியரங்குக் காவலாளிகள் இல்லாததால் காலை ஐந்து மணிக்குக் கொடிமரம், கயிறு இதர பொருட்கள் ஆகியவற்றை லொறியில் கொண்டு சென்றோம்.

ஆறுமணிக்கு சில நிமிடங்கள் இருக்கையில் பல உத்தியோகத்தர்கள், பொது மக்கள் வந்து விட்டனர். சிற்றூழியர் ஒருவரும் வரவில்லை. ஒவ்வொருவரது முகத்தையும் பாரத்தேன்.

ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்ததவரை – வராத சிற்றூழியரை இடைநிறுத்துவது. சேவையிலிருந்து விலக்குவது பற்றிக் கதைத்தார்கள். எனது நினைவு தந்தையார் வேலை செய்த சாப்பாட்டுக் கடையை நோக்கிச் சென்றது.

ஏதோ பிரச்சினை. இரண்டு நாட்கள் நகரச் சுத்திகரிப்பு தொழிலாளர் வரவில்லை. எச்சில் இலைத் தொட்டியில் நிரம்பியுள்ளது. மாற்று வழி இல்லாததால் கடையைப் பூட்டுவோம் என்றார் முதலாளி.

‘’தேவையில்லை’’ என்று சொன்ன சிங்காரம்பிள்ளை ஒரு பெரிய காட்போட் பெட்டியை எடுத்து வந்து இலைகளை அள்ளிப் பின்புறம் கொண்டு சென்றார். குழிவெட்டி அவற்றைப் புதைத்தார். முதலாளிக்கு மட்டுமல்ல – வழக்கமாக சாப்பிட வருபவர்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.

சிங்காரத்தின் மகனல்லவா – தில்லை . கையிலிருந்த மணிகூட்டைக் கழற்றி ஒருவரிடம் கொடுத்துவிட்டு, அலவாங்கை எடுத்துக் கொண்டு நிலத்தில் குத்தினேன். எத்தனை பேர் சுற்றி வந்தார்கள் என்று தெரியாது. கணப் பொழுதில் கொடி மரங்கள் நாட்டப்பட்டுக் கடமைகள் முடிவடைந்தன. இச் சம்பவத்தின் பின் இக்கட்டான வேளைகளில்....

‘இது ஒரு குறைவான தொழில் - எப்படி செய்வது?’

‘அது பெரிய வேலை எப்படி செய்வது?’

என எண்ணுவதில்லை, முந்திக் கொள்வேன், விடயம் பூர்த்தியாகி விடும்.

இன்னுமொரு சம்பவம். தொலைபேசி உட்பட எதுவித நவீன சாதனங்களும் கிளிநொச்சிக் கச்சேரிக்குக கிடைக்கத 90களின் பிற்பகுதியில் கச்சேரி கடிதத்தலைப்பு செல்வாக்குள்ள அங்கீகரிக்கப்பட்ட சாதனமாகத் திகழ்ந்தது. முக்கியமான பொருட்களைக் கிளிநொச்சிக்குக் கொண்டு வரவும், கிளிநொச்சியிருந்து பிற இடங்களுக்கு கொண்டு செல்லவும் மாத்திரமன்றி கச்சேரிக் கடிதத்தலைப்பில் அரச அதிபரின் சிபார்சுடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடமாடியோர் மீது கெடு பிடிகள் இல்லையென்று சொல்லலாம். . கடிதத்தலைப்பின் தேவை அதிகமாக இருந்தாலும் அவற்றைக் கொழும்பிலேயே அரச அச்சகக் கூட்டுதாபனம் மூலம் அச்சிட வேண்டிய நிலை . கூட்டுத்தாபன விநியோகப் பகுதி விமானப்படைத் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக அமைந்திருந்தால் வாகனத்தை நிறுத்தி வைக்க முடியவில்லை. 5000 கடிதத்தலைப்புகளைப் பொறுப்பேற்று கிளிநொச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும.;

முப்பது வருடங்களுக்கு முன்பாக கிளார்க்காக வேலை செய்த கொழும்பில் தவறுதலாகப் பென்சில் கீழே விழுந்தாலும் விழுந்த மறுகணமே எடுத்துக் கொடுப்பதற்க்கு பியோன் ஒடி வந்த சம்பவங்களைச் சுகமாக நினைத்துக் கொண்டு, சட்டைக் கொலரின் மத்தியில் தொங்கிக் கொணடிருந்த கழுத்து பட்டியைத் தூக்கி பின் புறமாகப் போட்டுவிட்டு இரு கைகளையும் நீட்டினேன். அவற்றின் மேல் தூக்கி வைக்கப்பட்ட 5000 கடிதத்தலைப்புகளையும் பிரதான வீதியொன்றினுடாக சுமந்து கொண்டு சுமார் 400யார் தூரம் நடந்து சென்று வாகனத்தில் ஏற்றினேன்.

உலகம் பழித்து ஒதுக்கும் வேலையானால் செய்யாமல் விடலாம். மற்றவற்றைச் செய்ய ஏன் வெட்கப்பட வேண்டும்.

No comments: