Wednesday, September 12, 2007

இருட்டில் நடக்க முடியும் (அப்பா-05)

(அப்பா நூலின் தொடர்)
நான்காம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த போது, தந்தையாருக்குக் கொதிக்கிற எண்ணெய் கண்ணில் தெறித்துக் காயங்களுடன் ஆஸ்பத்திரயில் இருக்கும் செய்தி அறிந்து அம்மாவுடன் சென்றேன்.

வழமையாகப் பெரிய பாத்திரமொன்றில் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி பலகாரங்கள் செய்த பின், பாத்திரத்திலுள்ள தேங்காய் எண்ணெய்யை ஒரு தகரத்தில் ஊற்றிவிட்டு அடுத்த வேலைகளை ஆரம்பிப்பது வழக்கம்.


அன்றைய தினம் தவறுதலாகப் பலகாரங்களைப் பாத்திரத்தினுள் போட்டபோது கொதிக்கின்ற எண்ணெய் தெறித்து கண்களிளும் முகத்திலும் பட்டுவிட்டது. யாரும் கிட்ட வரவேண்டாம் என்று சொல்லிய தந்தை, பாத்திரத்தைக் தூக்கிச் சூடான எண்ணெயைத் தகரத்தில் ஊற்றி விட்டு எண்ணெய் பாத்திரத்தைக் கிணற்றடியில் வழமையாக வைக்கும் இடத்தில் வைத்து விட்டு நடந்ததைச் சொல்லி, மற்றவர்களின் துணையோடு ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.

கொதி எண்ணெய் தெறித்து, பார்க்க முடியாத நிலையிலும்; தந்தையாரின் செயல் பலருக்கு வியப்பைக் கொடுத்தது. அவர் சொன்னார் ‘’அடுப்பிலிருந்து ஏழு அடி தள்ளி எண்ணெய் ஊற்றி வைக்க வேண்டிய தகரம், பின்னர் இடது புறம திரும்பி நாலு அடி நடக்க வாசல் -பின்னரும் இடது புறமாக நடக்க கிணற்றடி தூரம், திசை ஆகியவற்றைக் கவனித்தால் இருட்டிலும் நடக்க முடியும் என்பார். .
(அப்பா வருவார்.....
முன்னைய இடுகைகள்''அப்பா'' என்னும் வகைப்படுத்தலில்

No comments: