Friday, September 14, 2007

பயணம் புறப்பட முன் (அப்பா தொடர் -07)


பொருட்களைப் பயன்படுத்த வேண்டும், சிந்தக் கூடாது என்று சொல்வார். பாடசாலை நாட்களில் பற்பசையில்லை.பற்பொடி தான் பாவனையில் இருந்தது. ஒருசிறு துகள் கூட வீணாகக் கூடாது என்பதற்காக முகப்பவுடர் பயன்படுத்திய பின் எறியும் சிறு தகரப் பேணியைத் துப்பரவாக்கி அதனுள் பற்பொடியைப் போட்டு வைக்கச் சொல்லுவார். மூடித் துவாரங்களுடாக வரும் பற்பொடியின் அளவு போதுமானதாக இருக்கும். அப்போது பற்பொடியின் விலை பத்துச் சதம் தான். ஆனாலும் அதையும் வீணாக்கன் கூடாது என்பதே தந்தையின் கொள்கை.

இப்போதுள்ளது போல் குமிழ்முனைப் பேனாவும், பிளாஸ்டிக் போத்தலும் இல்லாத காலம். எழுதுவதற்க்கு மையும் தலை அலங்காரத்துக்கு எண்ணையும் கொண்டு செல்லக் கண்ணாடிப் போத்தல் பயன்படுத்தப் பட்ட காலம். அதற்காக அளவில் சிறிய நன்கு மூடத்தக்க போத்தல்களை சிறிய அட்டைப் பெட்டியில் பழைய சீலைகளைச் சுற்றி வைக்கும் படி சொல்லித் தந்தார் அதனால் போத்தல் உடைந்து பொருள் பழுதாக வாய்ப்பில்லை.

வெளியே ஒரிடத்தில் தங்கியிருந்து புறப்படுவதற்கு முன்பாக எல்லாப் பொருட்களையும் மேசையில் அல்லது கட்டிலில் அடுக்கி வைத்துப் பின்னர் இவற்றைப் பையில் எடுக்க வேண்டும். குளியலறை, அலுமாரி போன்றவற்றில் பொருட்கள் ஏதாவது வைத்து விட்டோமா என்று சரி பார்க்க வேண்டுமென்றும் சொல்லுவார்அண்மையில் மிகமிக முக்கிய இடத்தில் இருக்கும் ஒரு பிரமுகர் அண்டைய நாட்டுக்கு மனைவியுடன் சென்று உத்தியோக பூர்வ விடயத்தை முடித்துக் கொண்டு திரும்பிய போது விமான நிலையம் வரை வந்து அவசரம் அவசரமாகத் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பிச் சென்றதற்குக் காரணம் குறிக்கும் போது கழற்றி வைத்த சங்கிலியை எடுக்க மறந்ததேயாகும்.

அப்பர் வருவார்...............
முன்னையஇடுகைகள்''அப்பா’’ என்னும்வகைப்படுத்தலினுள்...

No comments: