Tuesday, November 13, 2007

சுடரொளி தந்த சுவை

‘’மனோலயம்'' நூல் வெளியீட்டு விழாவில் இடம் பெற்ற நகைச்சுவையான உரையின் சில பகுதிகள். சுடரொளி பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அந்த பகுதியை உங்களுக்கு தருகின்றேன்.

1) புலம்பல்கள் பல ரகம்

‘’மனோலயம் நினைவு மலர் வெளியீட்டு விழாவிலே வாய்விட்டுச் சிரிக்க நல்ல நகைச்சுவை கதைகள் கிடைத்தன. ‘என்ன. நினைவுமலர் விழாவில் வாய்விட்டு சிரிக்க நகைச்சுவை கதைகளா?’

அப்புடின்னு கேட்கத் தோணல்ல. சொற்பொழிவுன்னா நாலும் இருக்கனும், நகைச்சுவை கட்டாயம் இருக்கனும். இந்தமலர் வெளியீட்டு விழாவிலே பேசுனவங்க சபாஸ் போடுற மாதுரி நன்னா பேசுனாங்க’’

‘’அடி சக்கை”

‘’கல்வி அமைச்சு மேலதிகச் செயலர் தில்லைநடராஜா இருக்காங்களே! அவுக ஒரு புலம்பல் கதை சொன்னாங்க’’

‘’சொல்லுதியலா!’’
‘’ ஒரு அந்தியேட்டி கிரியை நிகழ்வு. குடும்ப உறவினர் பெயரெல்லாம் வைச்சு ஆச்சி புலம்பல், ஆத்தா புலம்பல், பொஞ்சாதி புலம்பல்ன்னு கல்வெட்டு பதிவு செய்வாங்கலாமில்லலே. அது நடந்து கிட்டிருக்கு’’

‘’ஒருத்தர் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கார். கண்ணு கலங்குகிறது. கை பிசைஞ்சிக்கிட்டு இருக்கு. பதிவுசெய்ரவருக்கு கையும் ஒடல்ல காலும் ஒடல்ல. அவரைப் பாரத்து நீங்க யாரு ? உங்க பேரு என்ன ? உங்களுக்கு என்ன வேனுமின்னு பதறிப் போய் கேட்கிறாரு.’’

‘’ஐயா சாமி!இவுக நமக்கே கொஞ்சம் பணம் தரணும். எப்புடி கேட்கிறதுன்னு தெரியல்ல. அதுதான் நம்ம பேரையும் பதிங்கன்னு சொல்லுதேன்.’’

‘’அடப்பாவி!’’
‘’ஆமா! இதை எப்படித்தான் பதியுறது?’’
‘’கடன்காரர் புலம்பல்ன்னு பதிஞ்சிட்டாப் போரது.’’





2) ஆட்டிப் படைக்கும் பப்ளிசிட்டி மோகம்


‘’பப்ளசிட்டி இருக்கே இதுவொரு பொல்லாத பிசாசு. சாதாரண மனிதன் முதல் அரசியல்வாதி, எழுத்தாளன், ஆட்சிட்யாளன் வரை எல்லோரையும் புடிச்சு. லோ லோன்னு ஆட்டி கைச்சிக்கிட்டிருக்கு. இதுலே இன்னொரு விசயம்என்னா அது பல விதத்திலும் புத்துப் பாம்பு மாதுரி தலையை வெளியிலே நீட்டும். இவுகளுக்கு அவுக பப்ளிசிட்டிக்காக இந்த பாடுபடுரது மத்தவங்க கண்ணுக்கு கேளிக்கையாக படுரது வெளங்கவே வெளங்காதாம்”

‘’அடப்பாவமே!’’
‘’இவ்வளவுக்கும் அவுக படுகிற பாடு ரொம்பவும் நையாண்டியாக இருக்கும். நம்ம தில்லைநடராஜா அவுக இதுக்குப் பொருத்தமாக அவுக கலந்துகின்ன விழாவிலே நடந்த ஒரு சமாசாரத்தை மனோலயம் நூல் வெளியீட்டு மேடையிலே சொன்னாங்க. இவுகமேடையிலே இருந்தப்போ ஒருத்தர் அடிக்கடி கிட்ட வந்து காதுல குசுகுசுத்தாராம்.’’
‘’அப்படி என்ன ரகசியம்’’
‘’பெருசா ஒன்னுமில்லே. காவற்காரன்
கந்தசாமியை காணவில்லை. அறிவிப்பைக் கேட்டவுடன் கந்தசாமி மேடைக்கு வரவும்! இதுதான் அவரு சொன்னது.’’

‘’ஐய்யய்யோ, பாவம் மனு~னுக்கு என்ன ஆச்சுதோ?’’

இப்புடி நாலைஞ்சு முறை அந்த ஆளு வந்து ஸ்பீக்கர்லே அறிவிக்கச் சொல்லிட்டாரு.’’

‘’ஆகா ! இப்புடி அசட்டை பண்ணலாமோ?’’

‘’கூடாதுதான் ரொம்பவும் பிசியாக இருந்தால மறந்துட்டாரு. அப்ப்புறம் பரிதாபம் தோணிடிச்சி. ஆமா ! இந்த காவற்காரன் கந்தசாமி யாருன்னு, சொன்னவனைக் கேட்டாரு.”

‘’அது நாம தாங்கன்னு அந்த ஆளு தலையை சொரிஞ்சின்னு நின்னான்.’’
‘’ஏலே! ஏண்டா இப்புடி அறிவிக்கச் சொன்னே?’’
‘’அவொன்னும் இல்லே சாமி. எல்லோரும் நான்தான் காவற்காரன் கந்தசாமின்னு தெரியட்டுமேங்கிற ஆசைதான்.’’

‘’அடப்பாவி’’



நன்றி-சுடரொளி(சிறிமான் சஞ்சாரி)
நவம்பர் 11- 17, 2007

2 comments:

Paheerathan said...

கடன்காரன் புலம்பல் அருமை .....ஹா ஹா ஹா. எப்படி புலம்பியிருப்பானோ


//சாதாரண மனிதன் முதல் அரசியல்வாதி, எழுத்தாளன், ஆட்சிட்யாளன் வரை எல்லோரையும் புடிச்சு. லோ லோன்னு ஆட்டி கைச்சிக்கிட்டிருக்கு//

உண்மைதான்

உடுவை எஸ். தில்லைநடராசா said...

பின்னூட்டத்திற்கு நன்றி பகீரதன்