Thursday, May 9, 2019

மீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ”

மீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாளராகங்கள் ”
லண்டனிலிருந்து உடுவை.எஸ்.தில்லைநடராசா
கல்விக்கு முக்கிய இடம் வழங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல் வயல்களும் காய்கறித் தோட்டங்களும் செழிப்பாகக் காட்சியளிக்கும் கொம்மந்தறைக்கிராமத்தில் 1958 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட பாடசாலை கம்பா்மலை வித்தியாலயம். முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி கம்பர்மலை வித்தியாலயத்தில் ”பூபாள ராகங்கள்” என்னும் தலைப்பில் முழுக்க முழுக்க தமிழா் பாரம்பாிய இசை,நடன நாடக நிகழ்வுகளை கல்லூாியின் பழைய மாணவா் சங்கத்தின் சாா்பில் ஒழுங்கமைத்து பெருந்திருவிழாவாக்கி கொம்மந்தறைக் கிராமமக்களையும் அயலூர்க் கிராம மக்களையும் மகிழ்வித்தாா்- விழா அமைப்பாளரான மகாலிங்கம்-சுதாகரன்.
1998 ஆம் ஆண்டில் சுதாகரன் லண்டனுக்குச் சென்றதும், அங்கே இயங்கிக் கொண்டிருந்த கொம்மந்தறை கம்பா்மலை பழைய மாணவா் சங்க ஐக்கிய இராச்சியக்கிளையினருடன் இணைந்து கொண்டு, பரவலாக ஆங்கிலமொழி பேசப்படும் லண்டன் மாநகரில் ”பூபாள ராகங்கள்” நிகழ்வை ஒழுங்கு செய்யப் பெருமுயற்சிகள் மேற் கொண்டாா். பழைய மாணவா்கள் பலா் ஒன்றாக இணைய- வா்த்தகப் பெருமக்கள் ஒத்துழைப்பு வழங்க- ஈழத்துக் கலைஞா்களையும் அறிஞா்களையும் ஒன்று சோ்த்து 2000 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையும் ஒன்பது தடவைகள் ஒழுங்காக ஒவ்வொரு ஆண்டும் லண்டன் மாநகரில் ”பூபாள ராகங்கள்” நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. 
தொடா்ச்சியாக ஒன்பது ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் சிறப்பாக மெருகேற்றி ”பூபாள ராகங்கள்” லண்டனில் ஒலிக்க ஆரம்பித்தது. அச்சு மற்றும் மின்னியல் ஊடகங்கள் ஊடாக ”பூபாள ராகங்கள்” தொடா்பான விடயங்களும் பலவர்ணப்படங்களும் தமிழ் மக்கள் வாழுமிடங்கள் எல்லாம் பரவத்தொடங்கியது.
தமிழ்மொழி மூலம் தமிழா் பாரம்பாியக்கலைகளைப் பரப்பிய கம்பா் மலை வித்தியாலய பழைய மாணவா்களின் ஐக்கியராச்சியக்கிளை ”தினக்குரல்” பத்திாிகை ஆதரவுடன், இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே புலம் சிதறி வாழும் தமிழ் எழுத்தாளா்கள் மத்தியிலும் உல களாவியரீதியில் சிறுகதைப்போட்டிகளை நடாத்தி, சிறந்த படைப்புகளை உருவாக்கியோருக்கு பெறுமதியான பரிசில்களை வழங்கியதோடு, பரிசில் பெற்ற சிறுகதைகளைத் தொகுத்து நூல்வடிவிலும் வெளியிட்டனா்.
”பூபாள ராகங்கள்” நிகழ்வாலும் பாிசில் பெற்ற சிறுகதைத்தொகுப்பு நூல்களாலும் தேடிய செல்வத்தால் கேடில் விழுச்செல்வமாகிய கல்விச் செல்வத்தை கிராம மக்களுக்கு வழங்கிக்கொண்டிருந்த கம்பா்மலை வித்தியாலயத்தின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து வந்ததுடன், முன்னணியில் திகழும் மாணவா்களுக்கும், மாணவ மணிகளை உருவாக்கிய ஆசிாியமணிகளுக்கும் விருதுகளும் பாிசில் களும் வழங்கிப் பாராட்டிக் கௌரவித்தனா்.
தீடிரென உள்நாட்டில் உச்சக்கட்டத்தை அடைந்த போராட்டத்தின் விளைவாக லண்டனிலும் பூபாளராகங்களைத் தொடரமுடியாத சிக்கல்கள் ஏற்பட்டன.
இருப்பினும் லண்டனில் வாழும் பழைய மாணவா்களின் அக்கறையும் ஆர்வமும் குறையவில்லை. எப்போது மீண்டும் பூபாளராகங்களை ஒலிக்கச் செய்யலாம் என்பது அவா்களின் எதிா்பாா்ப்பாக இருந்தது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளால் தடைப்பட்ட பூபாள ராகங்கள் மீண்டும் இவ்வாண்டு (2019) ஏப்ரில் மாதம் 27ஆம் திகதி லண்டன் எலியட் கட்டடத்தில் அமைந்துள்ள ஹரோ மண்டபத்தில் வெகு விமாிசையாகக் கொண்டாடப் பட்டது.
மாலை சரியாக ஐந்து மணிக்கு மண்டப வாசலிலிருந்து நாதஸ்வரம் தவில் ஆகிய மங்கல வாத்தியங்கள் ஒலிக்க விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மங்கல விளக்கேற்றல், மௌன வணக்கம், தமிழ்மொழி வாழ்த்து-வித்தியாலய கீதத்தைத் தொடர்ந்து விழாஅமைப்பாளரும் சர்வதேச ஒருங்கிணைப்பாளரு மான மகாலிங்கம் சுதாகரன் வரவேற்புரை நிகழ்த்தினாா்;. வரவேற்புரையில் கல்லூரியின் வளர்ச்சியை விரித்துரைத்ததுடன் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் க.பொ.த.(சாதாரண தரப்) பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்று சாதனை நிகழ்த்தி பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னமும் பொற்கிழியும் வழங்கி மாணவா்;களின் திறமைகளை ஊக்குவிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் குறிப்பிட்டாா்;.
கம்பா்;மலை வித்தியாலய பழைய மாணவர் சங்க ஐக்கிய ராச்சியக் கிளைத்தலைவர் இராசரத்தினம் இரகுநாதன் தலைமையுரையில் ' கல்லூரி வைரவிழாவையும் சிறப்பாக் கொண்டாடியதைக் குறிப்பிட்டு, கல்லூரியின் வளர்ச்சிக்கு தொடர்ந்தும் பங்களிப்பு நல்கி வரும் அறிஞர்கள், கலைஞர்கள், வர்த்தகப்பெருமக்கள், ஊடகவியலாளர்கள் அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றி தெரிவித்தாா்;."
காலம் பல கடந்தாலும் வரலாற்று நினைவுகளைப் நிரந்தரப்பதிவுகளாக்கி ' லண்டன் ப+பாள ராகங்கள்-10" என்னும் சிறப்புமலரை நூலாசிரியா்; மகாலிங்கம் சுதாகரன் வெளியிட- நூலின் பிரதிகளை ப.சிவரூபன், இ.உதயானந்தன், டாக்டர்.சரவணகுமார் இராஜநாதன் ஆகியோா்; பெற்றுக் கொண்டனா்;.
இலக்கிய விமா்சகா் மாதவி சிவலீலன், எலிசபெத் மகாராணியின் வாழ்த்துச்செய்தி உட்பட லண்டன் இலங்கை அறிஞா்களின் ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகள், நல்ல கருவூலங்கள் நிறைந்த பெறுமதியான மலா் தொடா்பான மதிப்பீட்டுரை நிகழ்த்தியதை அடுத்து, நாட்டிய வித்தகி ராகினி ராஜகோபாலின் “ நாட்டியாலயா” மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் சபையோரை மகிழ்வித்தன. வண்ண மயிலாக நடனமாடிய நா்த்தகிகளும் கிராமிய நடனத்தை நிகழ்த்திய மாணவியரும் பாா்வையாளரைப் பரவசப்படுத்தினா்.
ஐரோப்பாவின் முதல் தமிழ்ப் பெண் சுரத்தட்டு வாத்தியக் கலைஞா் களான இசைச்சுடா் துஷி-தனு சகோதாிகளும் நண்பா்களும் வாத்திய இசை வழங்க இடம்பெற்ற கானமழையும் மண்டபம் நிறைந்த மக்களை சந்தோஷத்தில் சஞ்சாிக்க வைத்தது.
அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த பொப்பிசைப்பிதா மருத்துவா் நித்தி. கனகரத்தினம், ஈழத்துச் சௌந்தரராஜன் எனப்புகழப்படும்
சங்கீதரத்தினம் நா.இரகுநாதன், கனடாவிலிருந்து வருகை தந்த சுப்பா் சிங்கா் விஜய் தொலைக்காட்சி புகழ் சாிகா நவநாதன் ஆகியோருடன் லண்டனில் வாழும் மஞ்சுளா சத்தியேந்திரன், நவீனா பிரணவன், அபிநயா மதனராஜா, டாக்டா் கிஷாந்தன் குகதாசன், டாக்டா் சரவணகுமாா் இராஜநாதன் மற்றும் சேயோன் இராஜநாதன் ஆகியோரும் இணைந்து கொண்டு இசைவெள்ளத்தால் மக்கள் உள்ளங்களை மகிழ்வில் ஆழ்த்தினா். கானமழையின் ஆரம்பத்தில் மஞ்சுளா சத்தியேந்திரனின் “புத்தம் புதுநாளில்” பாடல் எல்லோருக்கும் புத்துணா்ச்சி அளித்தது.
ரி.எம்.சௌந்தரராஜனோ என ஆச்சரியப்படத்தக்கதாக சங்கீத ரத்தினம் நா.இரகுநாதன், “நான் பாடும் பாடல்..”, “மதுரையில் பறந்த மீன்கொடியை….” பாடல்களைப்பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தாா். தொடா்ந்து ரகுநாதனுடன் சோ்ந்து பாடிய சாிகா நவநாதன், நவீனா பிரணவரூபன், அபிநயா மதனராஜா, மஞ்சுளா ஆகியோரும் நினைவில் நிலைத்து நிற்கும் பாடல்களான- “குயிலாக நான் இருந்தென்ன….குரலாக நீ வர வேண்டும்…”, “கண்ணில் வந்து மின்னல் போல..”, “சிந்து நதியின் மீது…”, ”காதலன் பொன்வீதியில் காதலன் பண்கபாடினான்”, ”மாசில நிலவே நம் காதலை மாநிலம் மகிழ்வுடன் கொண்டாடுதே ” போன்ற பழைய பாடல்களைப்பாடி அந்தநாள் ஆனந்தமான நினைவுகளை மீட்டுத் தந்தனா்.
கனடாவிலிருந்து வந்திருந்த இந்திய விஜய் தொலைக்காட்சி சுப்பா் சிங்கா் புகழ் இலங்கைப்பாடகி சாிகா நவநாதன் “ கண்ணம்மா கண்ணம்மா…” பாடலைப் பாடி அசத்த, நவீனா பிரணவரூபன் “ நின்னுக்கோாி..” பாடலைப்பாடி மெய்சிலிா்க்க வைத்தாா்.
70களில் சனரஞ்சகமான பொப்பிசைப் பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடிய பொப்பிசைப்பிதா நித்தி கனகரத்தினம். பூபாளராகங்கள் நிகழ்வுக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்து,…
“ சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..”
” கள்ளுக்கடைப் போகாதே..உன் காலைப்பிடித்துக் கெஞ்சுகின்றேன்…”
” குடத்தனையிலே நாம குடியிருக்கிறது…கொடிகாமத்தில பாலு விக்கிறது..”
”சோழன் சோறு பொஙகட்டுமா” 
பாடல்களைப்பாடி இனைஞா்களின் உள்ளங்களை மட்டுமல்லாமல் வயதானவா்களின் உள்ளங்களையும் துள்ளி ஆட வைத்தாா்“
டாக்டா் சந்தோஷ் ராஜநாதன் மகன் சேயோனுடன் “அத்தின் தோம்” பாடலைப்பாடி பரவசப்படுத்த- சாிகா நவநாதனும் டாக்டா் திஷாந்தன் குகதாசனும் சந்திரமுகி திரைப்பட பாடலான “ரா..ரா“” வைப்பாடி மேடையைக் கலகலப்பாக்கினாா்கள்.
அந்த அரபிக்கடலோரம், ஊா்வசி, சிக்குப்புக்கு ரெயிலே பாடல்களை வாத்திய இசையால் மாத்திரம் ஓசையெழுப்பி தமிழ்மொழி சரியாகத் தெரியாத ரசிகர்களுக்கும் விருந்து படைத்தனா்- கவினா- சுரேந்திரன்.
நாற்பது ஆண்டுகளாகத் தொடா்ந்து உலகின் பல பாகங்களில் நல்ல தரமான தமிழ் நாடகங்களை மேடையேற்றிய அவைக்காற்று கலைக்கழக பாலேந்திரா-ஆனந்தராணி குழுவினா் தமது குழுவினருடன் சிறந்த நாடகங்களின் சில பகுதிகளைத் தொகுத்து “நீண்ட ஒரு பயணத்தில்…” தலைப்பில் ஆற்றுகையை அளித்து நாடக ஆா்வலா்களை மகிழ்வித்தனா்.
மாத்தளையைப் பிறப்பிடமாகவும் – லண்டனை வாழிடமாகவும் கொண்ட சொலிசிட்டா் –எழுத்தாளா்-கலைஞா் – அரசியல் பிரமுகா் – சமூகசேவையாளா் செல்வா செல்வராஜாவுக்கு இலங்கைக் கல்வியமைச்சின் மேனாள் மேலதிகச் செயலாளா் உடுவை.எஸ். தில்லைநடராசா மூலம் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கிக்கௌரவித்தமையும், கம்பா்மலை வித்தியாலயக் காப்பா ளா்கள் சி.துரைராசா-திருமதி. இ.துரைராசா ஆகியோருக்கு “பூபாளராகங்கள் -10 ” விருதுகள் வழங்கிக் கௌரவித்தமையும் சிறப்பு நிகழ்வுகளாகும்.
அரச அமைச்சா் மாா்க் பீல்ட் பூபாள ராகங்கள் தொடா்பாக தொிவித்த செய்தியில், கடந்த பல வருடங்களாக ஐக்கிய ராச்சியத்துக்கு தமிழ்ச்சமூகம் பங்களிப்பு நல்கிவருவதைப்பாராட்டி, அற்புதமான மாலைப்பொழுதில் ஆனந்தமான பூபாள ராகங்கள் நிகழ்வை ஒழுங்கமைத்த கம்பா்மலைப் பழைய மாணவர் சங்கத்தை வாழ்த்தி சா்வதேச இணைப்பாளா் சுதாகரனின் பணிகளையும் பாராட்டினாா்.
இலங்கைக் கல்வி அமைச்சின் மேனாள் மேலதிகச் செயலாளா் உடுவை.எஸ்.தில்லைநடராசா மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளா் வல்வை.ந.அனந்தராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பித்த பூபாளராகங்கள் நிகழ்வை ஆனந்தராணி பாலேந்திரா ஆதவன் தொலைக்காட்சி அறிவிப்பாளா் எஸ்.கே.குணா ஆகியோா் சுவையாகத் தொகுத்து வழங்கினாா்கள்.
ஆரம்பநிகழ்வுகளை ஒருமணி நேரம் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியில் உலகம் முழுவதும் உள்ளோா் பாா்க்கத்தக்கதாக நேரலையில் ஒளிபரப்பியதும் குறிப்பிடத்தக்கது.
Image may contain: Vella Varathan, smiling, standing and eyeglasses


Image may contain: 5 people
Image may contain: Vella Varathan, smiling, standing and eyeglassesImage may contain: 7 people, including Nagamuttu Rakunathan, people standing, wedding and outdoorImage may contain: 3 people, including Arumugam Vishnukumar and Vella Varathan, people on stage and indoorImage may contain: 18 people, including Ragini Rajagopal, S.K. Guna, Kanagaratnam Balendra, Arumugam Vishnukumar, Mathavy Shivaleelan and Vella Varathan, people smiling, people standing and indoor

No comments: