Wednesday, October 31, 2007

சுகமான காற்று

மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது அப்பா வேலை செய்யும் கடைக்குச் சென்றிருந்தேன். சுமார் பத்துப் பதினைந்துபேர் ஒரு பொருளைச் சுற்றிவரப் பதினைந்துபேர் ஒரு பொருளைச் சுற்றிவரப் புதினம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆவல் மிகுதியால் நானும் அவர்களுக்கிடையே நுழைந்தபோது மூன்று பேர் புதிய மின்சார விசிறியைக் கூரையில் பொருத்திக் கொண்டிந்தனர். மூன்று நீளமான சிறகுகள் கொண்ட அழகான விசிறியை மேசையில் மேல் ஏறி நின்ற இருவர் பிடித்துக் கொண்டிருக்க நிலத்திலிருந்து கூரையைத் தொட்டுக் கொண்டுடிருந்த ஏணியில் ஏறி நின்றவர் நீளமான குழாயை வளைந்த கொழுக்கியில் கொளுவி மின்சார வயரை இணைத்தார். சுழல ஆரம்பித்த மின்விசிறியிலிருந்து வந்த காற்றை அனுபவிப்பதற்க்காக காரண காரியம் இல்லாமல் அடிக்கடி மின்விசிறிக்குக் கீழே வந்தவர்களுள் நானும் ஒருவன்.


என்னைப் பொறுத்தளவில் மின்விசிறியிலிருந்து வந்த காற்று குளிராகவும் சுகமாகவும் இருந்தது. ஆனால் அப்பாவோ அக்காற்று உஷ்ணமானது எனவும் தெரிவித்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறிது நேரம் நிற்கவே சுகமாயிருந்தால் அதன் கீழ் படுத்திருந்தால் எப்படியிருக்கும் என எண்ணிக் கற்பனைச் சுகம் கண்டேன்.

என் கற்பனைகேற்றவாறு அன்றிரவு அப்பா இரவு முழுவதும் கண் விழித்துக் குசினியில் வேலை செய்ய வேண்டியிருந்தது. நான் மேசைகளை மின்விசிறிக்குக் கீழே போட்டுக் கொண்டு விசிறியையும் ஆகக் கூடியளவு வேகத்தில் சுழலவிட்டேன். அதை யாரும் பார்க்கக்கூடாது என்ற எண்ணத்துடன் கதவையும் யன்னலையும் இறுக்கிப் பூட்டினேன். நித்திரை என்றால் அப்படியொரு நித்திரை. காலைப்பொழுது விடிவதற்கு சற்று முன்பாக அப்பா எழுப்பிய போது என்னால் சரியாக கதைக்கக் கூடி முடியவில்லை. தொண்டை கட்டியிருந்தது. கண்கள் சிவந்திருந்தது. உடம்பெல்லாம் ஒருமாதிரிக் கணகணவென்றிருந்தது. மின்விசிறியிருந்து சூடான காற்றுத் தான் வரும் என்பதை உணர முடித்தது. அப்பா சொன்னார் ‘’ மின்சார விசிறி சுழலும் போது அறைக்கதவு ஜன்னல்களை முடிந்தளவுக்குக்குத் திறந்து வைத்தால் காற்றோட்டம் சீராகி உடல் அலுப்பாவதையும் சூடாவதையும் குறைக்கும்” அதன் பின்பு மின்சார விசிறிக்குக் கீழ் இருக்கும் போது சூடான காற்றை அறையில் குறைப்பதற்காக கதவு ஜன்னல்களை நன்றாகத் திறந்த விடுவதால் முதல் நாள் ஏற்பட்ட திக்குமுக்காடல் இல்லை.

2 comments:

கானா பிரபா said...

அப்பா தொடரினூடே அறிவியலும் கலந்து சிறப்பாகப் போகின்றது.

உடுவை எஸ். தில்லைநடராசா said...

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றிகள் பிரபா.