Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Sunday, August 26, 2007

ஆங்கிலத்தில் எனது வலைப்பதிவு

தமிழ் வலைப் பதிவில் வந்த எனது சில படைப்புகளை ஆங்கிலத்திலும் பார்க்க முடியும். creations of uduvai எனும் பெயரில் அவ் வலைப் பதிவு இயக்கின்றது. கீழே அதன் சுட்டி.

creations of uduvai

Wednesday, August 1, 2007

அறிமுகம்

தில்லைநடராஜா என்பது எனது பெயர். கலை, இலக்கிய உலகில் உடுவை எஸ். தில்லைநடராஜா என்றும் உடுவை என்றும் அறியப்பட்ட நான் தற்போது பணியாற்றுவது இலங்கை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக. 1965 ஆம் ஆண்டு இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பின்னர் அரசு சேவையில் நுழைந்தேன். அப்போதிலிருந்து 1978 வரை இலங்கைப் பொலிஸ் தலைமைச்செயலகத்தில் வேலை. பின்னராக இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையின் பின்னர்

1978 – 1980 வரை மட்டக்களப்பிற்கான கூட்டுறவு உதவி ஆணையாளர்
1980-1982 வரை மன்னார் கூட்டுறவு உதவி ஆணையாளர்.
1982-1988 வரை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கூட்டுறவு ஆணையாளர்
1988-1989 வரை வடக்குகிழக்கு மாகாணத்திற்கான மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர்.
1989-1990 வரை வடக்குகிழக்கு மாகாணத்திற்கான கூட்டுறவு, உணவு மற்றும் வர்த்தக அமைச்சின் பிரதிச் செயலாளர்.
1990-1991 வரை வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளரர்
1992-1995 வரை வவுனியா அரச அதிபர்
1995-1998 வரை கிளிநொச்சி அரச அதிபர்
1998-1999 வரை இந்து கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளாராகவும் பணிபுரிந்தேன்.

2000 ஆண்டில் இருந்து இன்று வரை இலங்கை கல்வி அமைச்சியின் மேலதிக செயலாளராகவும் பணிபுரிந்த வண்ணம் உள்ளேன்.

கலை இலக்கிய துறையில் எனது ஈடுபாடு என்பது எனது மாணவப்பருவத்திலே உருவானது. அது வானொலி நாடகமாக, சிறுகதையாக, பத்திரிகை ஆசிரியனாக, நடிகனாக, நிகழ்ச்சி தொகுப்பாளனாக என்னை மாற்றியது. எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பான “நிர்வாணம்” 1990 இல் வெளியானது. தமிழ்நாட்டின் கோவை லில்லி தேவசிகாமணி நினைவு விருது பெற்ற இந்த நூலின் தலைப்பே இந்த வலைப்பதிவின் தலைப்பாகி இருக்கிறது. 1947 இல் யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் பிறந்த நான் எனது கிராமத்தின் பெயரை உடுவை எனவாக்கி உடுவை.எஸ். தில்லைநடராஜா ஆனேன்.இதுவரையில்

நிர்வாணம் (சிறுகதைத் தொகுப்பு)
கடற்கன்னி (சிறுவர் கதை)
மந்திரக்கண்ணாடி (சிறுவர் கதை)
நம்பிக்கையோடு நிம்மதியை நாடும் யாழ்ப்பாணம் (1994 இல் யாழ்ப்பாணத்தில் எனது நேரடி அனுபவம்)
கல்யாணம் முடித்து பார் (நகைச்சுவை கதைகள்)
அப்பா (எனது அப்பா பற்றிய உணர்வு- இந்தியா ஜனாதிபதி அப்துல் கலாமின் பாராட்டு பெற்றது)

என சில நூல்களை வெளியிட்டு இருக்கின்றேன். இது தவிர நீங்கள் அறிந்திருந்த மேடை நாடகங்கள், வானொலி நாடகங்களிலும் நான் தோன்றி இருக்கின்றேன்.